education

img

சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு...  நாகர்கோவில் மாணவருக்கு 7-ஆம் இடம்...

சென்னை 
நாட்டின் மிக உயரிய அரசு பணிகளான ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் போன்ற பணிகளுக்கான தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. 

நடப்பாண்டிற்கான (2019-2020) சிவில் சர்வீஸ் தேர்வு 829 இடங்களுக்கு நடத்தப்பட்டது. பிப்ரவரி மாதம் இறுதிக்கட்ட தேர்வான நேர்காணல் நிறைவடைந்த நிலையில், இன்று (செவ்வாய்) தேர்வு  முடிவுகள் வெளியிடப்பட்டன. 

இந்நிலையில், அகில இந்திய அளவில் பிரதீப் சிங் என்பவர் முதலிடம் பிடித்தார். நாகர்கோவிலை சேர்ந்த கணேஷ்குமார் பாஸ்கர் என்ற நபர் அகில இந்திய அளவில் 7-ஆம் இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பிடித்துள்ளார்.  www.upsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

;